பழைய ஓய்வூதிய திட்டம் – அரசு ஊழியர்கள் செம ஹேப்பி!

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ஜெய்வர்தன் சிங், போபாலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதைப் போல், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை, முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அமல்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 2023 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், இது தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதி உள்ளேன். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த பிரச்னையை காங்கிரஸ் கட்சி எழுப்பும். மாநில வளர்ச்சியில் மாநில
அரசு ஊழியர்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

2005 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த புதிய ஓய்வூதியக் கொள்கையால் அரசு ஊழியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி முன்வைத்தது. அப்போது, 2005 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று மாநில அரசு தெரிவித்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.