பிரதமருக்கு ஃபோன் போட்ட உக்ரைன் அதிபர்… மோடியின் ஸ்ட்ராங் அட்வைஸ் இதுதான்!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷியா தீர்மானத்தை முறியடித்தது.

ஆனால், இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. ஐ.நா. சபையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷியா வரவேற்றது. இந்தியாவுடனான சுமுகமான உறவு தொடரும் என்றும் ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில்,
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் குறித்து எடுத்துரைத்து, அரசியல் ஆதரவு கோரினார்.

ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? – இந்தியா திடீர் விளக்கம்!

அப்போது, “போரினால் உக்ரைனில் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு உக்ரைன் அதிபரிடம், பிரதமர் மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். வன்முறையை கைவிட்டு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், ‘உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து அந்நாட்டு அதிபரிடம் கேட்டறிந்த பிரதமர், இந்தியர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக்க உக்ரைனின் உதவி தேவை” என்று கேட்டுக்கொண்டார். ‘அமைதியான முறையில் நிலைமையை கொண்டு செல்ல இந்தியாவின் பங்களிப்பு எப்போதும் இருக்கும்” என்று ஜெலன்ஸ்கிக்கு மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். அப்போது, உக்ரைனை விரட்டும் ரஷியாவின் ஆக்கிரமிப்பின் போக்கைப் பற்றி அவரிடம் எடுத்துரைத்தேன்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் மண்ணில் உள்ளனர். அவர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கு அரசியல் ஆதரவை வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.