பீகார் மாநிலம் ககாரியா நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயம் <!– பீகார் மாநிலம் ககாரியா நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் … –>

பீகார் மாநிலம் ககாரியா நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் அமிதேஷ் குமார், முதற்கட்ட விசாரணையின்படி நகரில் 3 குண்டுவெடிப்புகள் நிகழ்துள்ளதாகவும், அவற்றில் 2 குண்டு வெடிப்புகள் குறைந்த அளவிலான தீவிரம் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபதிலிருந்து இருபத்து மூன்று அளவிலான சிறிய ரக வெடிகுண்டுகள் தொடர்ந்து தரையில் விழுந்ததால், பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறினார். மேலும், குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.