ரஷ்ய வீரர்களை குழப்பி திசைதிருப்பி நாட்டை விட்டு விரட்ட உக்ரைன் பலே திட்டம்!



நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைதிருப்ப உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது 3 நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டு தலைநகர் கீவிவை கைப்பற்றி போராடி வருகிறது.

அதேசமயம், ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் இராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது.

இந்நிலையில், உக்ரேனியர்கள் தங்கள் பிராந்தியங்களில் உள்ள சாலை குறியீடுகளில் இருந்து தெருக்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை அகற்றுமாறு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கோரியுள்ளது.

இது எதிரியைக் குழப்பி திசைதிருப்பும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக உக்ரைனுக்குள் நுழைந்தள்ள எதிரியைக் குழப்புவதற்கும் திசைதிருப்புவதற்கும், உக்ரேனியர்கள் பிராந்தியங்களில் உள்ள தெருக்கள், நகரங்கள், கிராமங்களின் எண்கள் மற்றும் பெயர்கள் கொண்ட பலகைகளை அகற்றுமாறு என்று பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டர் வாயிலாக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உக்ரைனிலிருந்து விரைவில் ரஷ்ய படைகளை விரட்ட நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.                       



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.