26/02/2022 8 PM: தமிழ்நாட்டில் இன்று 480 பேருக்கு கொரோனா பாதிப்பு, 2 பேர் மட்டுமே உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு ஐநூறுக்கும்  கீழே குறைந்துள்ளது மக்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அதிக பட்சமாக சென்னையில் 126 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8.0 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று மட்டும் 63,263  மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 6,42,81,633 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 480  பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு, 34,48,568 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 38,002 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 1,464 பேர் தொற்றில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 34,03,402  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலத்தில் அதிகபட்ச பாதிப்பு சென்னையில் பதிவாகி உள்ளது. சென்னையில்  இன்று 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த பாதிப்பு 7,49,728 ஆக உள்ளது.

மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 3
செங்கல்பட்டு 55
சென்னை 126
கோவை 72
கடலூர் 3
தர்மபுரி 3
திண்டுக்கல் 4
ஈரோடு 18
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 16
கன்னியாகுமரி 10
கரூர் 4
கிருஷ்ணகிரி 8
மதுரை 6
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 4
நாமக்கல் 11
நீலகிரி 18
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 3
சேலம் 13
சிவகங்கை 7
தென்காசி 2
தஞ்சாவூர் 10
தேனி 0
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 20
திருவண்ணாமலை 3
திருவாரூர் 6
தூத்துக்குடி 5
திருநெல்வேலி 5
திருப்பூர் 14
திருச்சி 13
வேலூர் 8
விழுப்புரம் 3
விருதுநகர் 4

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.