கழட்டி விட்ட காதலியை போஸ்டர் அடித்து நாறடித்த நாம் தமிழர் தம்பி..! வாங்கிய 18 ஓட்டால் விரக்தி <!– கழட்டி விட்ட காதலியை போஸ்டர் அடித்து நாறடித்த நாம் தமிழர்… –>

நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை காதலித்த பெண்ணும் கைவிட்டுச் சென்றதால் , காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அந்தப்பெண் எழுதிய காதல் கடிதங்களையும் போஸ்டராக அச்சடித்து வீதி வீதியாக ஒட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்த ஜெயராஜ் என்பவருடைய மகன் விஜய்ரூபன். இவர் லவ்பேர்ட்ஸ் விற்பனை செய்யும்கடை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சியில் 2 வது வார்டில் நாம்தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

விஜய் ரூபன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது 4 வருடமாக காதலித்து வந்த பெண் ஒருவர் தான் தோழியாகத்தான் பழகினேன் என்று கூறி காதலில் இருந்து கழன்று கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமானது. இதனை அறிந்த விஜய் கடுமையான விரக்தி அடைந்தார்.

தேர்தலில் 18 ஓட்டுக்கள் மட்டுமே போட்டு வாக்காளர்கள் ஒரு பக்கம் ஏமாற்றிய நிலையில் பிரிந்து சென்ற காதலி மீதான வெறுப்பால், காதலிக்கும் போது ஜோடியாக எடுத்த புகைப்படத்தையும், காதல் கடிதத்தையும், சினிமா பாடல் வரிகளோடு போஸ்டராக அச்சடித்து, களக்காடு நகர்பகுதி முழுவதிலும் சுவரொட்டியாக ஒட்டிஉள்ளார்.

குறிப்பாக அவரது காதலிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் வீட்டை சுற்றியும் சுவரொட்டியை ஒட்டியுள்ளார். இதனால்அதிர்ச்சி அடைந்த பெண்வீட்டார் களக்காடு காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ளனர். புகாரின்பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லவ்பேர்ட்ஸ் தம்பி விஜய்யை தேடிவருகின்றனர்.

காதலித்த போது எடுத்த படங்களை போஸ்டராக ஒட்டியதால் அந்தப்பெண்ணின் திருமணத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.