தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து விபத்து <!– தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழு… –>

தெலுங்கானாவில் சிறிய ரக பயிற்சி விமானம் வயல் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

நலகொண்டா மாவட்டம் நாகார்ஜுன சாகர் கால்வாயை ஒட்டிய பகுதியில் “பிளை ஏவியேஷன்” பிரைவேட் லிமிடட் என்ற பெயரிலான தனியார் விமான பயிற்சி நிலையம் உள்ளது.

மதியம் சிறிய ரக பயிற்சி விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மகிமா என்ற பெண் விமானி உட்பட இருவர், பயிற்சிக்காகச் சென்றுள்ளனர். அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தின் மீது பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென தாழப் பறந்து, உயர்மின்னழுத்த கம்பி வடத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

விமானம் கீழே விழுந்ததை அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பார்த்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த இருவருமே அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போயினர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.