மும்பையில் பவர்கட் ரயில் சேவை பாதிப்பு| Dinamalar

மும்பை,-மஹாரஷ்டிர மாநில தலைநகர் மும்பையின் பல பகுதிகளில் நேற்று காலையில் திடீரென மின் வினியோகம் தடைபட்டது.

இதனால் உள்ளூர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. தலைநகர் மும்பையின் பல பகுதிகளில் நேற்று காலை 9:50 மணிக்கு மின் வினியோகம் தடைப்பட்டது.மும்பையின் இருதயமாகக் கருதப்படும் மின்சார ரயில் சேவையும், ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் பாதிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகே மின் வினியோகம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.மும்பைக்கு மின்சாரம் வழங்கப்படும் மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறுகளால் இந்த மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.