ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம்! – உக்ரைன் அதிபர் விளக்கம்

கீவ்,
உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷியா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது.  பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் தங்கள் நாட்டின் பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. 

பெலாரசில் வைத்து நடைபெற உள்ள ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கு முதலில் மறுப்பு தெரிவித்த உக்ரைன் அரசு, இப்போது பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால், இப்போது இந்த விவகாரத்தில் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி  மாற்றுக்கருத்தை வைத்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,
ரஷியாவின் படையெடுப்புக்கான ஏவுதளமாக பெலாரஸ் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றால் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.வேறு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் பங்கேற்போம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.