ரஷ்யாவிடம் சரணடையாத வீரர்களின் குடும்பங்களை தாக்க திட்டம்: அமெரிக்கா விடுத்துள்ள புதிய எச்சரிக்கை


ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தீவிரமாக தாக்கி வரும் நிலையில், அந்த நாட்டு ராணுவ வீரர்களை உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி ரஷ்ய எச்சரிக்கை விடுத்துவருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவிடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்காவின் உளவுத்துறை தகவல் அளித்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

உக்ரைன் வீரர்களின் அத்தகைய சரணைடைதல் இன்றுவரை நடைபெறாவிட்டாலும், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த திட்டத்தால் உக்ரைன் வீரர்களை மறைமுகமான வழியில் விரைவில் சரணடைய வைக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து
செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், விரைவில் ரஷ்ய ராணுவம் உக்ரைன் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது மனித உரிமை விதிமீறல்களில் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உக்ரைனில் மனித உரிமை மீறல்களில் விரைவில் ரஷ்யா மேற்கொள்ளலாம் என தானும் நம்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிக்க ரஷ்யா போலியான பிரச்சாரத்தில்  இறங்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.