இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் எட்டு பேர் கைது

ராமேசுவரம் மீனவர்களின் ஒரு விசைப்படகை சிறைபிடித்து அதில் இருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைபிடித்தனர். அதில் இருந்த ரமேஷ் (40),ரோடிக்(18), அஜித்(19), கொலம்பஸ்(52), இமான்(22), லின்சன்(23), பவுத்தி(19), இஸ்ரேல் (20) ஆகிய 8 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். இலங்கை கடற்படை கடந்த 26 நாட்களில் தமிழகம், காரைக்காலை சேர்ந்த 80 மீனவர்களை கைது செய்துள்ளது. இதில் 21 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.