மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் முதல் கட்ட ஓட்டுப் பதிவு துவங்கியது| Dinamalar

இம்பால்: மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் முதல் கட்ட ஓட்டுப் பதிவு இன்று (பிப்;28) காலை 7 மணிக்கு துவல்கியது

மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 38 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப் பதிவு துவங்கி உள்ளது. இந் நிலையில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 2 பேர் பலியாகி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

latest tamil news

60 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது மணிப்பூர். இங்கு இன்றும் , மார்ச் 5-ந் தேதியும் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பாக 35 வேட்பாளர்களும், பா.ஜ., சார்பாக 38 பேரும் நாகா மக்கள் கட்சி சார்பாக 27 பேரும் களத்தில் உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.