மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள்! உடல்களை சோதனை செய்த வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி



தமிழகத்தில் 7 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை கே.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், மர்மமான முறையில் மயில்கள் இறந்த கிடப்பதாக
வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையில் 7 மயில்கள் இறந்து கிடந்ததை கண்டு அதனை சோதனை செய்தனர்.

அப்போது 7 மயில்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதனால் வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றது யார் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.