ஐரோப்பிய நாடொன்றிக்கு செல்ல முயற்சித்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலிக்கான போலி வதிவிட வீசாவைப் பயன்படுத்தி டோஹா ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே, குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிலாபம் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் … Read more

மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே காரணம்-தேவேந்திர பட்னாவிஸின் மனைவி குற்றச்சாட்டு <!– மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே கா… –>

மும்பையில் நடக்கும் 3 சதவீத விவாகரத்துக்கு மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதே காரணம் என முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் (Devendra Fadnavis) மனைவி குற்றம்சாட்டியுள்ளார். குண்டும் குழியுமான சாலைகளில் பயணிப்பதால் பெரும் அவதிக்கு ஆளாவதாகத் தெரிவித்த அம்ருதா ஃபட்னாவில் (Amruta Fadnavis), போக்குவரத்து நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாததே 3 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்றார். இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த சிவ சேனா துணைத் தலைவர் பிரியங்கா சதுர்வேதி ((Priyanka … Read more

சாய்னா நேவால் விவகாரம்: காவல்நிலையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ஜனவரி 5-ல் பஞ்சாப் மாநிலம் சென்றபோது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர் அங்கிருந்து திரும்பினார். இது குறித்துப் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்தப் பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டித்து பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அவரது கண்டனத்தை விமர்சிக்கும் வகையில் சித்தார்த் ட்வீட் ஒன்று செய்திருந்தார். சித்தார்த்தின் இந்த ட்வீட் தரக்குறைவானது என்று பெரும் சர்ச்சைக் கிளம்பியது. … Read more

3ம் உலகப்போர் பதற்றம்! அரச குடும்பத்துக்கான ரகசிய பாதுகாப்பு சுரங்கங்கள் தயார் நிலையில்

மூன்றாம் உலக போர் அல்லது ஏதேனும் பயங்கரவாத நிகழ்வுகள் நடந்தால் அவற்றில் இருந்து இங்கிலாந்தின் அரச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ரகசிய சுரங்க பாதைகளை கொண்ட (panic room) எனப்படும் பாதுகாப்பு அறைகள் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் என இருநாடுகளுக்கு இடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமேயானால் அவற்றில் இருந்து அரச குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் (panic room) தயாராக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை … Read more

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்ததி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்ததி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்றை யதினம் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும் வகையில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

வரும் 8-ந்தேதி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி மசோதாவை அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வருகிற 8-ந்தேி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் … Read more

ராமானுஜரின் 216 அடி உயர சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி இன்று மாலை சிலையை திறந்து வைத்து நாட்டுடமையாக்குகிறார். வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக்கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் பஞ்சலோகத்தில் இந்த … Read more

சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்யுங்கள்!: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

சென்னை: சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பதவி உயர்வு, ஊதிய நிலுவை கோரி ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கண்ணம்மாள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இளநிலை உதவியாளராக கண்ணம்மாள் பணியாற்றியபோது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை எனவும் தவறுதலாக அவரது பெயர் தமிழ் ஆசிரியர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வுக்கு … Read more

பாஜகவுக்கு தாவிய மணிப்பூரி நடிகர்: மணிப்பூர் தேர்தலில் பரபரப்பு

இம்பால்: மணிப்பூரைச் சேர்ந்த நடிகர் சோமேந்திர சிங் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். மணிப்பூரில் வரும் 27 மற்றும் மார்ச் 3ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜக கட்சியில், ‘கைகூ’ என்று அழைக்கப்படும் மணிப்பூரி திரைப்படத்தில் நடித்த நடிகர்  ஆர்.கே.சோமேந்திர சிங் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சிலர் நேற்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் முன்னிலையில் பாஜகவில இணைந்தனர். அப்போது மணிப்பூர் பாஜக பொறுப்பாளர் சம்பித் பத்ரா, மாநில … Read more

சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் : பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதராபாத்: சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் என தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறினார். சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மேலும் கூறியதாவது:குருவின் மூலமாகத்தான் நாம் அறிவை பெறுகிறோம். ராமானுஜரின் இந்த உருவச்சிலை மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கட்டும். ராமானுஜரின் தைரியம், கருத்துக்கள் மற்றும் சித்தாத்தங்களை பின்பற்றுவோம். இந்த சிலை இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு கூறும் .உலகம் முழுவதும் உள்ள … Read more