ஆத்தங்குடியில் மஞ்சு விரட்டு| Dinamalar

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள ஆத் : ங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஆத்தங்குடி அந்தரநாச்சியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 126 மாடுகளுக்கு கால்நடைத்துறை சார்பில் பரிசோதனை செய்யப்பட்டு

தகுதியுடைய 100 மாடுகள் தொழுவில் அவிழ்த்து விடப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டு மாடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.உள்ளூர் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.