உக்ரைனிலிருந்து கேரளா திரும்பிய 36 மாணவர்கள்

கேரளாவைச் சேர்ந்த 36 மாணவர்கள் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நேற்று (திங்கட்கிழமை) மாலை உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்த 36 மாணவர்களில் 25 பேர் கொச்சிக்கும், 11 பேர் திருவனந்தபுரத்திற்கும் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

image
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தலைநகர் கிவ்வை விட்டு உடனே வெளியேறுமாறும் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் இன்று கிவ்வை விட்டு வெளியேறுமாறும் இந்தியத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இடைவிடாமல் தொடரும் இந்தியர்களின் மீட்புப் பணி: புகாரெஸ்டிலிருந்து புறப்பட்ட 7வது விமானம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.