பல நாட்கள் கழித்து ரஜினி செய்துள்ள விஷயம்..! இது எதிர்பார்த்தது தானே ?

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே முக்கிய நடிகர்களுள் ஒருவர் ரஜினி. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும்
ரஜினி
தற்போது
நெல்சன்
இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியின் 169 ஆவது படமான இப்படத்தை
சன் பிக்சர்ஸ்
தயாரிக்க
அனிருத்
இசையமைக்கின்றார்.

சமீபத்தில் இந்த அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் ரஜினியின் கடைசி சில படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதாலும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்தினாலும் ரஜினி இனி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

விவாகரத்திற்கு பிறகு முதல்முறை சந்தித்துக்கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா.. எங்கு தெரியுமா ?

தற்போது அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. மேலும்
தனுஷ்
மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவினால் சோகத்தில் ஆழ்ந்த ரஜினி வீட்டிலேயே இருந்து வந்தார். வீட்டிலும் யாரிடமும் பேசாது ரஜினி தனிமையிலேயே இருந்து வந்ததாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் அன்புச்செழியன் இல்லத்திருமண விழாவில் ரஜினி கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தனுஷ் மற்றும்
ஐஸ்வர்யா
விவாகரத்திற்கு பிறகு பல நாட்கள் கழித்து ரஜினியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் தற்போது ரஜினி சில மாதங்களுக்கு பிறகு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். என்னவென்றால் தமிழ் நாட்டின் முதலமைச்சரான மு.க .ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

கடைசியாக ரஜினி பொங்கல் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டார். அதன் பிறகு தன் அடுத்த படத்தின் அறிவிப்பைப்பற்றி கூட ரஜினி ட்விட்டரில் பதிவிடவில்லை. இருப்பினும் இன்று முதல்வரின் பிறந்தநாளுக்காக ரஜினி அவரை வாழ்த்தி ட்விட் செய்திருப்பது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.