மூணு மடங்கு சம்பளம்… வளர்த்து விட்டவர்களை கடைசி நேரத்தில் கவிழ்த்துவிட்டாரா நட்சத்திரா?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த சீரியல் ‘யாரடி நீ மோகினி’. ஹீரோயினாக ‘வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் நட்சத்திரா. பிரைம் டைமில் ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

சமீபத்தில் இந்த சீரியல் முடிவடைந்த போது நட்சத்திராவையே ஹீரோயினாக கமிட் செய்து அடுத்த சீரியலைத் தொடங்க முடிவு செய்து இருந்தார்களாம் சேனலில். ‘தெய்வம் தந்த பூவே’ என்கிற அந்தத் தொடருக்காக நட்சத்திராவிடம் கேட்ட போது, அவரும் சம்மதம் சொல்லி ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்து விட்டார்களாம்.

நட்சத்திரா

தொடர்ந்து ஹீரோவும் இறுதி செய்யப்பட்டு ’ஷூட்டுக்குக் கிளம்பலாம்’ எனத் தேதியை முடிவு செய்து நட்சத்திராவுக்கு சேனல் தரப்பிலிருந்து போன் செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அந்த அதிர்ச்சி பதிலைத் தந்திருக்கிறார் நட்சத்திரா.

அதாவது ‘நீங்க தர்றதாச் சொன்ன சம்பளம் ரொம்பக் குறைவா இருக்கு’ என்றாராம். சேனல் மற்றும் தயாரிப்புத் தரப்பில் இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், சுதாரித்துக் கொஞ்சம் கூடுதலாகத் தரச் சம்மதித்திருக்கிறார்கள்.

அதன் பிறகும் ஷூட் கிளம்பத் தயாராக இல்லை நட்சத்திரா. கடுப்படைந்த சேனல் தரப்பு ’எதுன்னாலும் ஓபனாச் சொல்லிடுங்க’ எனக் கேட்க…

நட்சத்திரா

”யா.நீ மோ’க்கு வாங்கினதை விட மூணு மடங்கு சம்பளம் பேசி இன்னொரு சேனல்ல ஹீரோயினா கூப்பிடுறாங்க. அவங்க தர்ற சம்பளத்தைத் தர முடியுமா’ எனக் கேட்டிருக்கிறார்.

‘வளர்த்து விட்ட எங்ககிட்டயே நல்ல பிசினஸ் டீல் பண்றீங்களே’ என்ற சேனல், ‘பரவால்ல, நீங்க அங்கயே பண்ணுங்க’ என அத்துடன் விஷயத்தை முடித்துவிட்டு வேறொரு புதிய ஹீரோயினை கமிட் செய்தார்களாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.