ரஜினி ஆசையில் மண்ணை அள்ளிப் போட்ட தனுஷ், ஐஸ்வர்யா?

தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி இரவு சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

அவர்களை சேர்த்து வைக்க இருவீட்டாரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகிறார்கள். இதையடுத்து மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக மீண்டும் சேர்வது என்று தனுஷும், ஐஸ்வர்யாவும் முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னையில் நடந்த இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட
தனுஷ்
,
ஐஸ்வர்யா
நடந்து கொண்ட விதத்தை பார்த்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இரவு பார்ட்டியில் தனுஷ், ஐஸ்வர்யா செய்த அதிர்ச்சி காரியம்
பார்ட்டியில் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் பார்த்தும், பார்க்காதது போன்று நடந்து கொண்டார்களாம். மீண்டும் சேரும் முடிவில் இருந்திருந்தால் அந்த பார்ட்டியை ஒரு வாய்ப்பாக வைத்து பேசியிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இடையே பாசமே இல்லை.

அவர்கள் மீண்டும் சேர்வார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்ட்டியில் நடந்தது குறித்து அறிந்த தனுஷ் ரசிகர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.

அண்ணனுடன் சேர்ந்து வாழுங்கள் அண்ணி என்று ஐஸ்வர்யாவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.