திருநங்கையாக மாறிய மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்! நெகிழ வைத்த சம்பவம்


தமிழகத்தில் திருநங்கை ஒருவருக்கு அவரது பெற்றோரே மஞ்சள் நீராட்டு விழா நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விருத்தாசலம் இந்திராநகரில் வசிக்கும் கொளஞ்சி-அமுதா தம்பதியினர் மகன் நிஷாந்த் (21).

டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ள நிஷாந்த்துக்கு, உடலில் மாற்றங்கள் தெரிந்துள்ளது, இதை பெற்றோரிடம் கூற அவர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்தார், அங்கு சென்ற நிஷாந்தின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.

அவரது பெயரை நிஷா என மாற்றியதுடன், உறவினர்களை அழைத்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர். நிஷாவுடன் பயின்ற பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.