திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளுக்கு தளர்வு <!– திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளுக்கு தளர்வு –>

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டு சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நாளை முதல் நீக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்வுகளில் 500 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் என்றும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 250 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் எனவும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு கட்டுப்பாடுகளை தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் முகக் கசவம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.