நூறு நாள் வேலை திட்டத்துக்கு நிதி கட் – மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு
குறை தீர்ப்பாளர்
நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி இல்லை என்று புதிய கட்டுப்பாட்டை
மத்திய அரசு
விதித்துள்ளது. இதுகுறித்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் செயலாளர் நாகேந்திர நாத் சின்ஹா கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பாளரை கண்டிப்பாக நியமிக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத மாவட்டங்களில் குறை தீர்ப்பாளர்கள் நியமிக்கப் படவில்லை என்றால், இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படாது. அடுத்த நிதி யாண்டு முதல் இந்த புதிய கட்டுப்பாடு அமலுக்கு வரும்.” என்றார்.

முன்னதாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் குறை தீர்ப்பு செயலியை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் குறை தீர்ப்பாளரின் செயல்பாட்டை எளிதில் கண்காணிக்க முடியும். அப்போது பேசிய அவர், மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் நியமிக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட புதிய கட்டுப்பாடை மத்திய அரசு விதித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.