பிரதமரின் தாயார் எடைக்கு நிகரான தங்கம்; காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடை| Dinamalar

வாரணாசி: பிரதமரின் தாயார் எடைக்கு நிகரான 60 கிலோ தங்கத்தை வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நன்கொடை அளித்தவரின் விவரங்கள் வெளியாகவில்லை. மாறாக, தான் தீவிர மோடியின் ரசிகர் எனவும், பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபெனின் எடைக்கு நிகரான 60 கிலோ தங்கத்தை அளிப்பதாக நன்கொடையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை வாரணாசி கோட்ட ஆணையர் தீபக் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ‛பெயர் குறிப்பிட விரும்பாதவரிடம் இருந்து பெறப்பட்ட 60 கிலோ தங்கத்தில், 37 கிலோ கருவறையின் உள் சுவர்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 23 கிலோ பிரதான கட்டமைப்பின் தங்கக் குவிமாடத்தின் கீழ்ப் பகுதியை அலங்கரிக்க பயன்படுத்தப்படும்’ என்றார். கடந்த பிப்.,27ல் பிரதமர் மோடி வாரணாசி வந்தபோது, கோவிலின் உள் சுவர்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.