#BigBreaking || ரஷ்யப்படை தாக்குதலில் சற்றுமுன் மேலும் ஒரு இந்திய மாணவர் உரிழப்பு.!

உக்ரைனில் ரஷ்ய படை தாக்குதலில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய படை தாக்குதலில் உயிரிழந்துள்ள மாணவர் பஞ்சாப் மாநிலம் பர்னாலாவை சேர்ந்தவர் என்றும், அந்த மாணவரின் பெயர் சந்தன் ஜிந்தால் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் வினிட்சியா நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாணவர் சந்தன் ஜிந்தால் படித்து வந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த நிலையில்,  சற்றுமுன் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் உக்ரைனில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.