தம்பியை விமர்சித்த அமைச்சர்கள் நீக்கம்| Dinamalar

கொழும்பு : தன் தம்பியும், நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சேயை விமர்சித்த இரண்டு அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.

நம் அண்டை நாடான இலங்கையில், கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது. பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட நிதியில்லாமல் நாடு திண்டாடுகிறது. இந் நிலையில், ‘இலங்கையின் இந்த நிலைமைக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேதான் காரணம்’ என, எரிசக்தி அமைச்சர் உதயா கம்மன்பிலா மற்றும் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவான்சா சமீபத்தில் குற்றஞ்சாட்டினர். அதையடுத்து, அவர்கள் இருவரையும் பதவியில் இருந்து நீக்கி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.