திருச்செந்தூரில் சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ராஜா சந்திப்பு

திருச்செந்தூர்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் நிர்வாகிகள் வழங்கியதாக தகவல் வெளியானது. இந்த தீர்மானத்தால் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டது.  அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
 
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா இன்று சசிகலாவை சந்தித்தார். தென் மாவட்டங்களில் சசிகலா ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரை திருச்செந்தூரில் ராஜா சந்தித்து பேசினார். தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.