42 வயசாகிருச்சு.. இன்னும் ஏன் கல்யாணம் ஆகலை..?: மனம் திறந்த பிரபாஸ்..!

பாகுபலி படத்துக்குப் பிறகு பான் இந்திய ஸ்டாராக உருவாகியிருக்கும்
பிரபாஸ்
, புதிதாக நடித்திருக்கும் படம் ‘
ராதே ஷ்யாம்
‘. இந்தப்படம் மார்ச் 11 ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

இதனையொட்டி, படபுரோமோஷனில் ஈடுபட்டு வரும் பிரபாஸ், மும்பையில் நடைபெற்ற ராதே ஷ்யாம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ராதே ஷ்யாமில் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் கை ரேகை நிபுணராக நடித்துள்ளீர்கள், ஆனால் டிரெய்லரில் வரும் வசனத்தில் காதல் பற்றிய கணிப்பு சரியாக இருந்ததில்லை என கூறியிருக்கிறீர்கள். நிஜத்தில் காதல் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன என நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரபாஸிடம் கேட்டார்.

இதற்கு பதிலளித்த பிரபாஸ், உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நிஜத்திலும் காதல் தொடர்பான கணிப்புகள் எப்போதும் தவறாகவே இருந்துள்ளன, அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். பிரபாஸூக்கு இப்போது 42 வயதாகிறது. ஆனால் இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

தனுஷ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவிற்கு வந்த வாழ்த்து செய்து: இதென்ன புது ட்விஸ்ட்..!

பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால் இருவரும் அது குறித்து வாய் திறக்கவில்லை. அதன்பின்னர் அவர்கள் இருவர் தொடர்பான கிசுகிசுக்களும் காணாமல் போனது.

ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக
பூஜா ஹெக்டே
நடித்துள்ளார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் இந்திய மொழிகள் மட்டுமல்லாது சீனா மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத சொன்னா controversy ஆகுமா தெரியல – கிருத்திகா உதயநிதி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.