இந்தியா 574 ரன்கள் குவிப்பு| Dinamalar

மொகாலி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி 574 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 175 ரன்களை குவித்தார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 357 ரன்கள் குவித்தது.

2ம் நாள் ஆட்டத்தை துவங்கிய ஜடேஜா, அஸ்வின் சிறப்பாக விளையாடினர். அஸ்வின் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா சிறப்பாக விளையாடி 175 ரன்களை குவித்தார். இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.