கிருஷ்ணகிரி: இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு: சோகத்தில் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது இரு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தொப்பி கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காயத்ரி (32) என்ற மனைவியும் கனிஷ்கா (7) மற்றும் சர்வன் (5) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.
image
வெங்கடேசன் பணி நிமித்தமாக திருப்பதிக்கு சென்று விட்ட நிலையில், நடுப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் மாமியார் உதய லட்சுமியுடன் காயத்ரி மற்றும் அவரது இரு குழந்தைகளும் வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று மாலை 3 மணியளவில் மாடியில் உள்ள தனது அறையில் தனது இரு குழந்தைகளையும் தூக்கியில் மாட்டிவிட்டு பின்னர் காயத்ரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
image
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சோக சம்வம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.