ஆயுர்வேத சிகிச்சை முடிந்து லத்தி படப்பிடிப்புக்கு திரும்பும் விஷால்…!

ஆயுர்வேத சிகிச்சையை முடித்துள்ள நடிகர் விஷால், விரைவில் ‘
லத்தி
’ படப்பிடிப்புக்கு திரும்ப உள்ளார்.’வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு ‘லத்தி’ படத்தில்
விஷால்
நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் உருவாகிறது.

இப்படத்தில் நடிகர் சுனைனா கதாநாயகியாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் வெளியாகவுள்ளது.

சி.முருகானந்தம்
என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஷால் நடித்து வருகிறார்.

வெளியானது ஆதியின் ”கிளாப்” படபுதிய அப்டேட்…!

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பிரபல ஸ்டெண்ட் கலைஞரான
பீட்டர் ஹெய்ன்
தலைமையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது விஷாலுக்கு எதிர்பாராத விதமாக கையில் காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டது.

இதையடுத்து கேரளாவில் உள்ள
குருகிருபா
ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு மாதமாக நடிகர் விஷால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இந்த சிகிச்சை முடிந்து தற்போது நடிகர் விஷால் வீடு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து நாளை நடைபெறும் ‘லத்தி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விஷால் கலந்துக்கொள்ள உள்ளார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.