காதல் கணவரின் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை <!– காதல் கணவரின் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டுத் த… –>

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே குடிகார லாரி ஓட்டுநரால் காதல் கணவர் உயிரிழந்த நிலையில், துக்கம் தாங்காமல் அவரது இளம் மனைவியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

குலசேகரநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் – பார்வதி தம்பதி 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஒன்றாம் தேதி தளவாய்புரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் குலசேகரநல்லூர் சென்ற ஆறுமுகப் பெருமாள் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி ஒன்று மோதியது. அதே நேரம் லாரியின் பின்பக்கம் மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் உடன் பிறந்த அண்ணன் – தங்கை இருவர் காயமடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேரில் படுகாயமடைந்த ஆறுமுகப் பெருமாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவல் அறிந்த பார்வதி, துக்கம் தாங்காமல் வீட்டிலுள்ள குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

குடிபோதையில் லாரியை ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய திருச்சியைச் சேர்ந்த வீரமணி என்பவன் கைது செய்யப்பட்டான்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.