4 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பிஎஸ்எப் வீரர் – பஞ்சாபில் அதிர்ச்சி

பஞ்சாபில் 4 சக வீரர்களை சுட்டுக் கொன்ற எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
image
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிஎஸ்எப் முகாம் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் வாஹா எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்எப் வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை அங்கு பணியில் இருந்த சடேப்பா என்ற காவலர், திடீரென தனது துப்பாக்கியால் அருகில் இருந்த சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, அவரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
image
இந்த விவகாரம் குறித்து பிஎஸ்எப் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி அழுத்தத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா அல்லது பிஎஸ்எப் வீரர்களுக்கு ஏற்பட்ட தகராறால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.