என்னை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்… நாட்டு மக்களிடம் உருக்கமான பேசிய அதிபர்!

சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு உக்ரைன்- ரஷியா போர் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில்,
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
, தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், போர் நிலவரம், நாட்டின் எதிர்கால சூழல் உள்ளிட்ட குறித்து உருக்கமாக கூறியது:

ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் அதிகமாக குண்டுகள் வீசப்படுகின்றன. இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுவே நீங்கள்(நாட்டு மக்கள்) என்னை பார்க்கும் கடைசி தருணமாகக் கூட இருக்கலாம். என்னை படுகொலை செய்வதற்கு ரஷிய அதிபர் புதின் உளவுப் படைகளை அனுப்பி உள்ளார். நூற்றுக்கணக்கான ரஷிய உளவுப் படைகள் கீவ் நகரில் உள்ளன. அவர்கள் எனது உயிருக்கு குறி வைத்துள்ளனர்.

உக்ரைனில் உணவுத் தட்டுப்பாடு… போர் நிறுத்தம் மீறல் – பரஸ்பர குற்றச்சாட்டு!

எந்த நேரத்திலும் நான் கொல்லப்படலாம். இதனையெல்லாம் நன்கு உணர்ந்துதான் உக்ரைன் நாட்டு நலனுக்காக மாற்றுத்திட்டங்களை ஏற்கனவே தயார் செய்து வைத்துவிட்டேன். நான் கொல்லப்பட்டாலும் உக்ரைனில் இந்த ஆட்சி தொடரும். அதை யாராலும் முடக்க முடியாது. எனக்கு பிறகும் உக்ரைன் நாட்டை பாதுகாத்துக் கொள்ள மக்கள் துணிந்து போராடுவார்கள். எங்கள் மண்ணை நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்.

உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. உக்ரைனுக்கு உதவ முன்வரவேண்டும். ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து எங்களுக்கு அதிக போர் விமானங்களை வழங்க வேண்டும்.

விமானங்கள் பறக்கத் தடை: ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் எச்சரிக்கை!

அப்படி கொடுத்தால்தான் உக்ரைன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் எனது கோரிக்கையை ஏற்க தயங்குகின்றன. இதனால் உக்ரைன் மக்கள் அடுத்தடுத்து பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள் என்று ஜெலன்ஸ்கி உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.