டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு <!– டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு –>

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10ரூபாயும், உயர் ரக மதுபானங்களுக்கு 80 ரூபாய் வரையும்  உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு  மதுவகைகள் மூலம் 10 கோடியே 35 லட்சம் ரூபாயும், பீர் வகைகள் மூலம் ஒரு கோடியே 76லட்சம் ரூபாயும் கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4ஆயிரத்து 396 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.