Aishwarya Rajinikanth:ஐஸ்வர்யா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

முசாபிர் காதல் பாடல் வீடியோவை இயக்க ஹைதராபாத் சென்ற
ஐஸ்வர்யா
ரஜினிகாந்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு வீடு திரும்பிய அவர், சற்று ஓய்வு எடுத்துவிட்டு முசாபிர் வேலையை துவங்கினார். முசாபிர் வீடியோ நாளை வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஐஸ்வர்யா கூறியிருப்பதாவது,

View this post on Instagram A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)
காய்ச்சல், வெர்டிகோவால் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். ஆனால் இன்ஸ்பையரிங்கான டாக்டர் உங்களை வந்து சந்தித்தால் மருத்துவமனை அனுபவம் மோசம் இல்லை. உங்களை சந்தித்ததன் மூலம் மகளிர் தினம் நன்றாக துவங்கியிருக்கிறது. கவுரவம் மேடம் என தெரிவித்துள்ளார்.

கை நிறைய பிளாஸ்டர் இருந்தாலும் சிரித்த முகமாக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவரின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் தான் பதறிவிட்டார்கள்.

சீக்கிரமாக குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறோம். இது என்ன அடிக்கடி இப்படியாகிவிடுகிறதே. உடம்பை பார்த்துக்கோங்க மேடம் என தெரிவித்துள்ளனர்.

நேர்மையானவர், பொறுமையானவர்: ஐஸ்வர்யாவின் பாராட்டை பெற்ற ‘லக்கிமேன்’

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.