நீண்ட நேரம் செல்போனில் பேசிய கணவன்! மனைவி திட்டியதால் விபரீத முடிவு.!

செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான கிருஷ்ணா என்பவர், சுங்குவார்சத்திரத்தை அடுத்த, சோகண்டி கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

கிருஷ்ணாவிற்கு சொந்த மாநிலத்தைச் சேர்ந்த பூஜா என்பவருடன் ஓர் ஆண்டிற்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின்பும் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திலேயே இருந்த பூஜா, ஒரு வாரத்திற்கு முன், சுங்வார் சத்திரத்தை அடுத்த சோகண்டி கிராமத்திற்கு வந்து கிருஷ்ணாவுடன் குடும்பம் நடத்தி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணா செல்போனில் வேறொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்டு பூஜா சந்தேகம் அடைந்தார்.

உடனே கோபமடைந்த பூஜா, கிருஷ்ணாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கிருஷ்ணாவிடம் இருந்த செல் போனை பறித்து கீழே போட்டு உடைத்துவிட்டு வீட்டின் உள்ளே இருக்கும் கழிவறைக்கு பூஜா சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபொழுது வீட்டின் வெளியே கிருஷ்ணா துாக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு சத்தம் போட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணாவை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கிருஷ்ணா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.