மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு… வெளியான சிசிடிவி காட்சிகள்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னாம்பேட்டையைச் சேர்ந்த இத்ரீஸ் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இரவில் வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றார்.

இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.