ஒரே நாடு; ஒரே தேர்தல் தேர்தல் ஆணையம் தயார்

ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற கோஷத்தை பிரதமர் மோடி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக மக்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள், அறிவுஜீவிகள் விவாதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதேநேரம் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை; ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.