சொகுசு கார் வாங்கிய சரண்யா துராடி

சின்னத்திரை பிரபலங்கள் தற்போது சினிமா நடிகர்களுக்கு இணையாக பெயரையும், பணத்தையும் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துராடி சொகுசு காரினை வாங்கியுள்ளார். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற அந்த காரின் விலை சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்.

தற்போது இந்த காரினை வாங்கியுள்ள சரண்யா துராடி முதல் வேலையாக மருதமலை கோயிலுக்கு சென்று அங்கு பூஜையை போட்டுவிட்டு 'எல்லாம் அவன் செயல்' என்று கெத்தாக கார் முன் நின்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்த சரண்யா துராடி, வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்த அவர் நல்ல ப்ராஜெக்ட்டுக்காக காத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.