கண்ணம்மா மீது பாசம் காட்டும் பாரதி… கடும் கோபத்தில் வெண்பா…

Tamil Serial Rating Bharathi Kannamma Update : என்ன கண்ணம்மா பாரதி இல்லாம தனியா வாழ்ந்து காட்டுவேனு சொன்னீங்களே அத்தனையும் நடிப்பா என்று கேட்கும் அளவுக்கு கண்ணம்மா பாரதியின் தயவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாரதி கண்ணம்மா தொடக்கத்தில் ஓரளவு வரவேற்பை பெற்ற இந்த சீரியல் கண்ணம்மாவின் நடைபாதை யாத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது அதனைத் தொடர்ந்து பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறிய இந்த சீரியல் தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

கணவன் தன்னைப்பற்றி தவறாக நினைத்துவிட்டானே இனிமேல் நாம் தனியாகத்தான் வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்று உறுதியுடன் போராடிய கண்ணம்மா இப்போது கணவன் வெறுத்து ஒதுக்கினாலும் அவனுடன் ஒட்டி உறவாடும் நிலைக்கு மாறியுள்ளார். ஒரு குழந்தை பாரதியிடமும் ஒரு குழந்தை தன்னிடமும் வளர்வது தெரிந்தும் கண்ணம்மா பாரதியிடம் இருக்கும் குழந்தையை தனது மகள்தான் என்று சொல்லவில்லை.

இதற்கு முக்கிய காரணம் தன்னிடம் வளரும் குழந்தை லட்சுமிக்குதான் அப்பா பாசம் கிடைக்கவில்லை. ஹேமாவுக்காவது அப்பா பாசம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். கண்ணம்மாவை பற்றி தப்பாக நினைத்து தப்பு செய்தது பாரதி அப்படி இருக்கும்போது பாரதியே வந்து கண்ணம்மாவை புரிந்துகொண்டால்தானே நன்றாக இருக்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக கண்ணம்மாவே பாரதியிடம் வளிய சென்று பேசுவது நான் தப்பு செய்துவிட்டேன் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது போலத்தான் உள்ளது.

இதனிடையே பாரதியின் மொபைல்போனை திருடிய திருடனை துரத்தி்கொண்டு ஓடிய கண்ணம்மாவுக்கு கத்திகுத்து விழுந்துவிட்டது. அவளை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு செல்லும் பாரதி அவளுக்கு தையல் போடுகிறான் இதை பார்த்த வெண்பா வெப்பி நிற்கிறாள். அப்போது கண்ணம்மா பாரதியை ஒரு ஏக்கத்துடன் பார்க்கிறாள். இத்துடன் பரமோ முடிவடைகிறது  இதை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீரியல் முடிந்துவிட்டால் நாங்கள் ஹேப்பியாக இருப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் பலரும் நீங்கள் இப்படி இழுவையாக இழுப்பதற்கு பதிலாக சீரியலை முடித்துவிட்டு செல்லாமே என்றும், 3-வது வேல்டு வார் முடிந்துவிட்டது ஆனால் இந்த சீரியல் இன்னும் முடிந்த பாடில்லை என்றும் கூறியுள்ளனர். அதிலும் ஒரு ரசிகர் இந்த சீரியல் முடியறதுக்குள்ள ஹேமா லட்சுமி இருவருக்கும் கல்யாணம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.

எவ்வளவுதான் நெகடீவ் கமண்ட்ஸ் வந்தாலும், இந்த சீரியலின் பரம ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து பார்ப்பது அங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு இந்த கமண்ட்ஸ்களும் ஒருசாட்சி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.