சேலத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் தங்க செயின் பறித்த மர்ம நபர்கள்.!

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மூங்கில் பாடி தெருவை சேர்ந்த பத்மாவதி என்ற மூதாட்டி, அப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், பத்மாவதி அளித்த புகாரின் பேரில் செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.