ட்ரோன் மூலம் தாக்கப்பட்ட சவுதி கச்சா எண்ணெய் நிலையம்! – பாதிப்புகள் குறித்து அறிக்கை

2019-ம் ஆண்டு ஏமன் நாட்டின் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு அரபு அமீரகங்களில் இருந்த எண்ணெய் நிலையங்கள் தான் இலக்காக இருந்தன. அப்போது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அப்காய்க் எண்ணெய் ஆலையில் ஒரு பெரும் தாக்குதல் நடந்தது.

அந்த தாக்குதலுக்கு ஹவூதிகள் பொறுப்பேற்றனர். மேலும் இந்தக் தாக்குதலால் தினசரி உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்

இது தொடர்பாக சவுதி அரசு நடத்தும் சவுதி பிரஸ் ஏஜென்சியால் வெளியிடப்பட்ட அமைச்சக அறிக்கையில், “ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலும் மீது வியாழக்கிழமை அதிகாலை 4:40 மணியளவில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய தீ விபத்து ஏற்பட்டது, ஆனால், தாக்குதலால் விநியோகம் பாதிக்கவில்லை.

யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இன்னும் இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்த தாக்குதல் உலகத்திற்கான எரிசக்தி விநியோகத்தின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையைக் குறிவைத்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது. ட்ரோன் தாக்குதல் எங்கிருந்து தொடங்கப்பட்டது என்பதை அறிக்கையில் குறிப்பிடவில்லை.

கச்சா எண்ணெய்

இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியா விமான நிலையத்தில் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.