தங்கள் ஜோடிகளுடன் வாழ்க்கையை என்ஜாய் செய்யும் செம்பருத்தி பார்வதி, அபி டெய்லர் ரேஷ்மா!

செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனும் கடந்த ஆண்டு நவம்பரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டனர்.

ஷபானா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோர் சம்மதமில்லாமல், திடீரென திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் மணமான ஒரு மாதத்துக்குள்ளே இவர்கள் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியதாகவும், இருவரும் விவாகரத்துக்கு நெருங்கி விட்டதாகவும் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.

இப்படி இருக்க, ஷபானா, ஆர்யனுடன் சேர்ந்து எடுத்த போட்டாவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, விவகாரத்து குறித்து வதந்திக்கு’ முற்றுப்புள்ளியை வைத்தார்.

இந்நிலையில் ஷபானா’ தற்போது கணவர் ஆர்யனுடன் சேர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்து’ இருக்கிறார். அதைப்பார்த்த ரசிகர்கள், வொவ், லவ்லி, கியூட், ஃபேவரைட் கபிள் என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.

பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடித்து பிரபலமான  ஆர்யன் இப்போது அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

அதேபோல ரேஷ்மா முரளிதரனும் தன், கணவர் மதனுடன் ட்ரெக்கிங் சென்ற வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து  ’சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என எழுதியிருக்கிறார்’.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா. பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கதாபத்திரத்தில் நடித்தார். அதில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. தற்போது அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.