தேர்தல் அரசியல் மறதியை தவிர்க்க காங்கிரசுக்கு புதிய தலைமை தேவை

ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் முன்னிலை வகித்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினர். ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, தங்கள் தலைமையின் முறையான மற்றும் முறைசாரா பதவிகளை காலி செய்ய பரிசீலிக்க வேண்டும்.

ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் முன்னிலை வகித்து, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினர். ஆனால், காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் தெளிவிலாமல் உள்ளது: வாக்காளர்கள் காங்கிரஸை ஆளும் கட்சியாகப் பார்க்க மாட்டார்கள், மேலும் கட்சியின் முதல் குடும்பம் இனி குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது. ராகுல் மற்றும் பிரியங்கா காந்திகள் ஐந்து மாநிலங்களிலும் கட்சியின் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கினர். அவர்கள் இப்போது யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, முறையான மற்றும் முறைசாரா தலைமைப் பதவிகளை காலி செய்ய வேண்டும். கட்சி நீடிக்க வேண்டுமானால், மிகப்பெரிய சக்தியாக உள்ள பாஜகவுக்கு எதிரான போட்டியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

2014-ம் ஆண்டு முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்றதில் இருந்து காங்கிரஸ் ஒரு தொடர் வீழ்ச்சியில் உள்ளது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு கட்சி முதன்முறையாக இவ்வாறு வீழ்ந்துள்ளது. அதன்பிறகு, காங்கிரஸ் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் எல்லா இடங்களையும் பாஜகவிடம் இழந்துள்ளது. இப்போது காங்கிரஸை உறுதியாக நிராகரித்த ஐந்து மாநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள்: பிரியங்கா காந்தி வதேரா பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கிய உ.பி.யில், அக்கட்சி 2 சதவீத வாக்குகளையே பெற்றது; பஞ்சாபில், கட்சி படுதோல்வி அடைந்துள்ளது – பதவி விலகும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தங்கள் சொந்த தொகுதிகளில் வெற்றி பெறத் தவறியுள்ளனர். முன்னாள் முதல்வரும், உத்தரகாண்டில் கட்சியின் தலைமை பிரச்சாரகருமான ஹரிஷ் ராவத்தும் வெற்றி பெறவில்லை. இது அவரது 2017-ம் ஆண்டு தேர்தல் செயல்திறனைப் போல உள்ளது. 2002 மற்றும் 2017 க்கு இடையில் காங்கிரஸ் கட்சி 3 முறை ஆட்சியில் இருந்த மணிப்பூரில், அக்கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சி மற்றும் வளர்ந்து வரும் பிராந்திய சக்தியான தேசிய மக்கள் கட்சிக்கு பின்னால் முடிக்க தயாராக உள்ளது. கோவா தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. 2018-ல் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் இருந்ததைப் போல இல்லாமல், இந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் உள்ளூர் தலைமையால், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி தலைமையிலான மற்றும் ஆற்றல்மிக்க கட்சி இயந்திரத்தின் ஆதரவுடன் நடந்த பாஜகவின் ‘இரட்டை இயந்திரம்’ பிரச்சாரத்தை எதிர்கொள்ள் முடியவில்லை.

சுவரில் அந்த எழுத்து சில காலமாக இருக்கிறது. காங்கிரஸில் உள்ள பலர் அதைப் படித்திருக்கிறார்கள். சிலர், அதை மூழ்கும் கப்பலாக உணர்ந்து விட்டுவிட்டார்கள். மற்றவர்கள் – உதாரணமாக, ஜி-23 தலைவர்கள் – கட்சி இன்னும் தலைமை நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால், குடும்பம் அதன் அரசியல் பயன்பாட்டைக் கடந்துவிட்டது. அது இப்போது காங்கிரஸுக்கு ஒரு சுமையாக இருக்கிறது: கட்சியின் தலைமையில் அதன் தொடர்ச்சி, ஒரு இளம் மற்றும் ஆர்வமுள்ள வாக்காளர்களை ஒதுக்கிவைக்கும் உரிமையின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. மேலும், கட்சிக்கு மந்தமான தோற்றத்தை அளிக்கிறது. நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து வாக்காளர்கள் இடம் பெயர்ந்து கட்சி மாறிய காலம் இது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.