மீண்டும் மகத்தான வெற்றி.. பாஜக தலைவர்களுக்கு ஜி கே வாசன் வாழ்த்து.!!

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 4 ல் பா.ஜ.க வின் வெற்றியானது மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பா.ஜ.க வின் வெற்றி பெரிதும் பாராட்டுக்குரியது.

குறிப்பாக நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மத்திய பா.ஜ.க அரசின் மீது 4 மாநிலங்களின் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது. எனவே பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், பா.ஜ.க வின் தேசியத் தலைவர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய மாநில அரசுகளின் ஒத்த கருத்து, அதன் அடிப்படையில் மக்களுக்கு கொடுத்த வளர்ச்சித் திட்டங்கள், கொரோனாவைக் கட்டுப்படுத்தி மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த நல்ல செயல்பாடு, நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக உயர்த்த உறுதியான நிலையில் செயல்படுவது ஆகியவற்றின் மூலம் வெற்றிவாகை சூடியிருக்கிறது பா.ஜ.க. மேலும் பா.ஜ.க வின் மீது மக்களுக்கு அகில இந்திய அளவில் நம்பிக்கை உயர்ந்திருக்கிறது.

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 4 ல் பா.ஜ.க வின் வெற்றியானது மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மீண்டும் மகத்தான வெற்றிக்காகப் பாடுபட்ட பாரதப் பிரதமர் அவர்கள், பா.ஜ.க வின் அகில இந்திய தலைவர்கள், வெற்றிபெற்ற மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருக்கு த.மா.கா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.