ரசிகர் மரணம் – நடிகர் ரஜினிகாந்த் கூறிய ஆறுதலும் வாக்குறுதியும்!

நடிகர் ரஜினிகாந்த் தனது முதன் முதலாக ரசிகர் மன்றம் தொடங்கிய முத்துமணி மரணத்திற்கு ஆறுதல் கூறியதுடன் அவரின் மகள் படிப்பு உள்ளிட்ட செலவுகளை பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு ஆரம்ப காலகட்டத்தில் முதல் முதலாக முத்துமணி என்பவர் மதுரையில் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். இவர் சமீபத்தில் உடல் நல குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த நிலையில் முத்துமணி மனைவி தொடர்பு கொண்டு பேசினார்.
முத்துமணி: முதல் மன்றம்; ரஜினி பூஜையறையில் திருமணம்;
அப்போது முத்துமணி மறைவிற்கு ஆறுதல் கூறியதுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரின் மகள் கல்வி செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். அதுகுறித்து ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.