வீடு திரும்பிய ஐஸ்வர்யாவுக்காக அனிருத் செய்த காரியம்: வேற லெவல் மேடம்..!

அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மீண்டும் உடல்நலக் குறைவு காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஐஸ்வர்யாவின் ‘
முசாபிர்
‘ ஆல்பம் பாடலும் திட்டமிட்ட தினத்தில் வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில் தனது ஆல்பம் பாடலின் புரோமோவை வெளியிட்டுள்ளார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் தயாரிக்கும் தனது பணியில் மீண்டும் இறங்கினார் ஐஸ்வர்யா.

அஜித்தின் ‘வலிமை’ படம் காப்பியா..?: எச். வினோத், போனி கபூருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஐஸ்வர்யா, மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிட்டபடி ‘முசாபிர்’ பாடல் வெளியிட முடியாமல் போனது. அதனை டீசரை மட்டும் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் ஐஸ்வர்யா. இந்நிலையில் தற்போது ‘முசாபிர்’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. இதனை தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அனிருத் குரலில் ஒலிக்கும் இந்தப்பாடலின் புரோமோ வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.