ஏன் முறைக்கிறீங்க…. சமந்தாவை பாதுகாப்பாக அழைத்து சென்ற கிரிக்கெட் வீரர்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை
சமந்தா
. தற்போது பாலிவுட்டிலும் தடம் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார்.

அதன் பிறகு சமந்தா, என்ன செய்கிறார் என்பதை உற்று கவனித்து வருகின்றனர் ரசிகர்கள். கணவரை பிரிந்த பிறகு தோழிகளுடன் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருகிறார் சமந்தா. அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

Maaran Review: தனுஷின் ‘மாறன்’ எப்படி? திரை விமர்சனம்!

இந்நிலையில் நடிகை சமந்தா மும்பையில் பிரபல கிரிக்கெட் வீரருடன் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு பில்டிங்கில் இருந்து இயக்குநர் ராஜ் நிடிமோருடன் சமந்தா மற்றும் கிரிக்கெட் வீரர்
வருண் தவான்
ஆகியோர் வெளியில் வந்தனர்.

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியை குறைக்காத சீரியல் நடிகை!

அவர்களை பார்த்த ரசிகர்கள் சமந்தாவை நெருங்க முண்டியடித்தனர். அப்போது சமந்தாவை பாதுகாப்பாக அவரது காருக்கு அழைத்து சென்ற கிரிக்கெட் வீரர் வருண் தவான், ஏன் அவரை முறைக்கிறீங்க? முறைக்காதீங்க என்று கூறினார். மேலும் சமந்தாவை யாரும் நெருங்க முடியாதப்படி அரணாகவும் அழைத்து சென்றார் வருண் தவான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நான் இருக்கேன்மா… முத்துமணி மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.