காலாப்பட்டு சிறையில் மனமகிழ் பூங்கா | Dinamalar

புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் ரூ.40 லட்சம் மதிப்பில், முகப்பு தோற்ற மனமகிழ் பூங்கா அமைக்கும் பணிக்கான பூஜை நடந்தது.காலாப்பட்டு தொகுதி, பெரியகாலாப்பட்டு மாத்துார் சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. சிறை வளாகத்தின் முன் பகுதியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் முகப்பு தோற்ற மனமகிழ் பூங்கா அமைக்கப்பட உள்ளது.இதற்கான பணி துவக்க விழா நேற்று நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சிறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.