சிபிஎஸ்இ 10, 12-க்கு ஏப்.26 முதல் 2-வது பருவ பொதுத் தேர்வு

சென்னை: கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10, 12-ம் வகுப்புபொதுத் தேர்வுகளை 2 பருவங்களாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டது. அதன்படி, முதல் பருவத்தேர்வு நவம்பர் – டிசம்பரில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 2-வது பருவ பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, 12-ம் வகுப்புக்கான 2-வது பருவ பொதுத் தேர்வு ஏப்.26-ம் தேதி தொடங்கி மே 19-ம்தேதி முடிவடைகிறது. தேர்வுகள் தினமும் காலை 10.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும்.

10-ம் வகுப்புக்கான 2-வது பருவ பொதுத் தேர்வு ஏப்.26-ம்தேதி தொடங்கி மே 24-ம் தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10.30 முதல் 12.30 மணிவரை நடைபெறும். ஒருசில தேர்வுகள் மட்டும் காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.